இலங்கை

மேலும் இரு அரசியல் கைதிகள் விடுதலை!

இலங்கை மத்திய வங்கி குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய இரு அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செல்லையா நவரத்தினத்திற்கு 200 வருட சிறைத்தண்டனையும், சண்முகரத்தினம் சண்முகராசாவிற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

விடுதலையான அரசியல் கைதிகளை தமிழ் அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்துள்ளதோடு, அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களின் வயது, உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் அறிவித்திருந்தார்.

இதற்கமைய நன்னடத்தையின் அடிப்படையில் குறித்த இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content