Site icon Tamil News

மேலும் இரு அரசியல் கைதிகள் விடுதலை!

இலங்கை மத்திய வங்கி குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய இரு அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செல்லையா நவரத்தினத்திற்கு 200 வருட சிறைத்தண்டனையும், சண்முகரத்தினம் சண்முகராசாவிற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

விடுதலையான அரசியல் கைதிகளை தமிழ் அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்துள்ளதோடு, அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களின் வயது, உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் அறிவித்திருந்தார்.

இதற்கமைய நன்னடத்தையின் அடிப்படையில் குறித்த இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version