இலங்கை செய்தி

முல்லைத்தீவில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோருக்கான துணுக்காயில் பதிவு நடவடிக்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் இன்றையதினம் காணாமல் போனோர் உறவுகளிடமிருந்து மேலதிகமான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது

இதில் துணுக்காய், ஜயங்குளம், புத்துவெட்டுவான், கோட்டைகட்டிய குளம் பகுதி மக்கள் இ‌ன்றைய தினம் வருகை தந்திருந்தனர்

இறுதி யுத்த கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இந்த சந்தர்ப்பத்தில் வந்து சாட்சியம் அளித்து ஆவணங்களை வழங்கி இருந்தனர்.

இதிலே கருத்து தெரிவித்த காணாமல் போனோரின் உறவுகள் தமக்கு இழப்பீடுகள் எதுவும் தேவையல்ல என்றும், இதேவேளை தமக்கு இறப்பு சான்றிதழ்களை வழங்க அவர்கள் எத்தனிப்பதாகவும் தெரிவித்த அவர்கள், தமக்கு தமது உறவுகளை தருமாறே கூறியுள்ளோம் என தெரிவித்தனர்.

இதேவேளை கருத்துரைத்த காணாமல் ஆக்கப்டோருக்கான அலுவலகர் தமக்கு இதுவரை 21,000 த்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் 5000 முறைப்பாடுகள் இராணுவ முப்படைகள் உடைய முறைப்பாடுகள் எனவும், அதிலும் இரட்டிப்பு செய்யப்பட்ட முறைப்பாடுகளாக 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதிலும் 4786 முறைப்பாடுகளுக்கு விசாரணைகளை தாம் முடித்துள்ளதாகவும் அதிலும் 3400 விண்ணப்பங்களில் இடைக்கால நிவாரணத்தை அவர்கள் கேட்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிலும் 1300 விண்ணப்பங்களை இழப்பீட்டு அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், மேலும் காணாமல் செய்யப்பட்டதுக்கான சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் என்பவற்றை உரிய விசாரணைகள் செய்து அவர்களுக்கு வழங்குவதற்கு தமது அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content