நியூசிலாந்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணத்தை கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்த்துவதாக அரசாங்கம் அறிவித்தது.
இந்தச் செய்தி, நாட்டின் முக்கிய சுற்றுலாத் துறையின் விமர்சனத்தைத் தூண்டியது. இது சுற்றுலா பயணிகளை விலக்கி வைக்கும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, சர்வதேச சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைய 22 டொலர் செலுத்துகின்றனர். ஒக்டோபர் 1 முதல், அந்தக் கட்டணம் 62 டொலராக உயரும்.
நியூசிலாந்திற்குச் செல்லும் போது பார்வையாளர்கள் பொதுச் சேவைகள் மற்றும் உயர்தர அனுபவங்களுக்கு பங்களிப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையாகும்.
நியூசிலாந்து பொருளாதாரத்தில் சர்வதேச சுற்றுலா மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது்
மார்ச் 2024 ஆம் ஆண்டுமுடிவடைந்த ஆண்டில் சர்வதேச சுற்றுலா பயணிகள் 11 பில்லியனுக்கு மேல் செலவழித்துள்ளனர் என்று சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் அமைச்சர் மாட் டூசி கூறினார்.