வட அமெரிக்கா

டிரம்ப் 2024ஆம் ஆண்டு தேர்தலில் களமிறங்குவதில் கடும் சிக்கல்..?

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டிரம்ப் மீது ஜார்ஜியா விசாரணை குழு 98 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

அதில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2020 அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டு வென்ற தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றியை தடுக்க முயற்சி செய்ததாகவும் டொனால்டு டிரம்ப் மீது ஜார்ஜியா விசாரணை குழு குற்றம் சாட்டியுள்ளது.

அந்த குற்ற பத்திரிக்கையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற பிரதிவாதிகள் டிரம்ப் தோல்வியடைந்ததை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் அவர்கள் வேண்டுமென்றே டிரம்பிற்கு ஆதரவாக தேர்தல் முடிவை சட்டவிரோதமாக மாற்றுவதற்கான வேளைகளில் ஈடுப்பட்டனர்.

இந்த 98 பக்க குற்றப்பத்திரிகையில் 19 பிரதிவாதிகள் மற்றும் 41 குற்ற வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அனைத்து பிரதிவாதிகளும் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த குற்ற பத்திரிகையில், ட்ரம்ப் தவிர, அவர் பதிவியில் வகித்த போது வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக பொறுப்பில் இருந்த மார்க் மெடோஸ் மற்றும் வழக்கறிஞர்கள் ரூடி கியுலியானி மற்றும் ஜான் ஈஸ்ட்மேன் ஆகியோரும் அடங்குவர்.

இந்த குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கப்பெரும் என்றும், அதுவரையில் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, வாஷிங்க்டன் நீதிமன்றம் டொனால்ட் டிரம்ப் நிரபராதி என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜார்ஜியா விசாரணை குழு அறிக்கை தற்போது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content