இலங்கை

இந்திய அரசாங்கத்தை கடுமையாக சாடிய இலங்கை ஜனாதிபதி

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையை விமர்சித்த இந்திய அரசாங்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.

“இந்தியர்களின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா எங்கள் சாதனையை விமர்சித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது,” என்று விக்ரமசிங்க First post.க்கு அளித்த பிரத்யேக பேட்டியின் போது கூறியுள்ளார்.

இதன்போது அவர்மேலும் தெரிவித்த்துள்ளதாவது,

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டியில் இலங்கை ஒரு போர்க்களமாக மாறக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தெற்காசிய அண்டை நாடுகளின் பாதுகாப்பிற்கு தனது நாடு ஆபத்தை ஏற்படுத்தாது என்று உறுதியளித்தார்.

ண்மைக் காலமாக இலங்கையில் உள்ள துறைமுகங்களுக்குச் சீன ‘உளவுக் கப்பல்கள்’ வருகை தந்த விவகாரம் இந்தியாவில் பாதுகாப்புக் கவலையை ஏற்படுத்தியிருந்தது. எவ்வாறாயினும், இருதரப்பு உறவுகளில் இது எந்த எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது என்று விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

“இந்தியா தனது சொந்த பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பைக் கெடுக்கும் வகையில் எதையும் செய்ய மாட்டோம். ஆராய்ச்சிக் கப்பல்களில் சோதனை நடத்துவோம் என்று புதுடெல்லியிடம் தெரிவித்துள்ளோம். இலங்கை ஒரு சுதந்திர நாடு, எங்களின் நட்பு ஏன் இந்த விவகாரங்களில் தங்கியிருக்க வேண்டும்?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content