ஐரோப்பா

பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ள அயர்லாந்து பிரதமர்

அயர்லாந்து நாட்டின் பிரதமர் லியோ வரத்கார், தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அதோடு அயர்லாந்து கூட்டணி அரசாங்கத்தின் ஒரு அங்கமான பைன் கோயல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் லியோ வரத்கார் விலகியுள்ளார்.

பைன் கோயல் கட்சியின் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும், தனிப்பட்ட காரணங்கள் மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் லியோ வர்த்கார் கூறியுள்ளார்.

தற்போது 45 வயதாகும் லியோ வரத்கார், இதற்கு முன்பு கடந்த 2017 முதல் 2020 வரை பிரதமராக பதவி வகித்தார். அதன் பிறகு 2022 டிசம்பர் மாதம் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவர் முதன்முதலில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நாட்டின் மிக இளம் வயது பிரதமராக இருந்தார்.

மேலும் லியோ வரத்கார் தன்னை ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட பிரதமர் ஆவார். இவரது தாயார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content