செய்தி

யாழில் சகோதரர்களின் உயிரை பறித்த தீவிபத்து (Update)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தீப்பற்றியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான ஒருவரும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் சகோதரர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(update) – யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான்
சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(02) அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இருவரும் களஞ்சியசாலையில் சென்று கதவை பூட்டி விட்டு நித்திரைக்கு சென்றபோதே அதிகாலை 12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டபோதும், களஞ்சியசாலையில் உறக்கத்தில் இருந்த இருவரும் உடல் கருகி பலியானதுடன் அங்கிருந்த பொருட்களும் தீயில் எரிந்ததால் அருகில் இருந்த வாகன தரிப்பிடத்திலும் தீப்பரவி சேதமடைந்தது.
மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதானவரும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.
களஞ்சியசாலையில் இருந்த சிலிண்டர் தீ விபத்துக்கு காரணமாக இருக்குமா என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிஷாந்தன், தடயவியல் பொலிஸார், பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content