ஐரோப்பா

பிரான்ஸில் இவ்வாண்டு மழலையர் பிரிவில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் மூன்றரை வயதுக் குழந்தை வாகனம் ஒன்றுடன் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PAU நகரில் உள்ள Marancy என்னும் பாடசாலையில் இவ்வாண்டு மழலையர் பிரிவில் சேர்க்கப்பட்ட Souhail என்னும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த புதன்கிழமை தாயாருடன் பாடசாலையில் இருந்து வெளியேறிய Souhail தனியார் வாகனத் தரிப்பிடத்தில் தாயாரின் வாகனத்தில் ஏறுவதற்கு முற்பட்ட போது பின்னால் வந்த வாகனத்தின் சக்கரத்துக்குள் அகப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் குழந்தை மரணமடைந்ததாக தெயவருகிறது.

இதனையடுத்து குறித்த வாகனத்தை ஓட்டிவந்த பெண்மணியை விசாரணைக்காக பொலிஸார் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளனர்.

குழந்தையை மோதிய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரைணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content