இலங்கை

இலங்கையில் 8 வருடங்கள் சக்கர நாற்காலியில் பாடசாலை சென்ற மாணவியின் சாதனை

பாணந்துறை எட்டு வருட காலம் சக்கர நாற்காலியில் பாடசாலை சென்ற மாணவி உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

பாணந்துறை அகமெதி பாலிகா தேசிய பாடசாலையின் (மாற்றுத்திறனாளி) மாணவி லக்ஷிகா பவனி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் வணிகத்துறையில் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார்.

இந்த மாணவியின் இடுப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் துரதிர்ஷ்டவசமாக நடக்க முடியாத நிலைக்கு மாணவி ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சக்கரநாற்காலியின் உதவியில் எட்டு வருட காலம் பாடசாலைக்குச் சென்று கல்வியை முன்னெடுத்துள்ளார்.

உடல் அங்கவீனத்தை கல்விக்கு இடையூறாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனத் தெரிவிக்கும் இவர், சிறந்த கணக்காளராக நாட்டுக்கு சேவையாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

(Visited 70 times, 1 visits today)
See also  மதுபான சாலைக்கு சிபாரிசு கடிதம் மாத்திரமே வழங்கினேன்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content