செய்தி

லியோ குறித்து மிகப்பெரிய இயக்குநர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

நடிகர் விஜய் நடிப்பில் இந்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள படம் லியோ. படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

படத்தில் பிரபல இயக்குநர் கௌதம் மேனன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் மல்லு கட்டுவது டீசர், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவற்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆனால் கௌதம் மேனன் விஜய்க்கு சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே படம் சூப்பராக வந்திருப்பதாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கௌதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

லியோ படத்தில் தான் நடித்த காட்சிகளை தான் பார்த்துள்ளதாகவும் மிகச்சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்த கௌதம் மேனன் விரைவில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மிகப்பெரிய இயக்குநர் லியோ படம் குறித்து பேசியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து பணியாற்றியது மிகப்பெரிய அனுபவமாக இருந்ததாகவும், சூட்டிங்கின் இடையில், விஜய்யுடன் ஒரு மாலைப்பொழுதில், ஐந்தாறு பேர் மட்டும் செலவழித்ததாகவும் அதை தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக கௌதம் மேனன் -விஜய் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட யோகன் அதிகாரம் ஒன்று படம் குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கௌதம் மேனன், அந்தப் படம் குறித்து விஜய்தான் சொல்ல வேண்டும் என்றும் ஸ்கிரிப்ட் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி மாஸ் காட்டியது.

அடுத்ததாக விக்ரம், சிம்ரன், ராதிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படமும் கௌதம் மேனன் இயக்கத்தில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் முடங்கியிருந்த நிலையில், கடந்த ஆண்டில் மீண்டும் படத்தை தூசி தட்டி சூட்டிங்கை எடுத்து முடித்துள்ளார் கௌதம் மேனன்.

சமீபத்தில் படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்தப் படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content