இலங்கை

இலங்கையில் அநாவசியமான இடங்களில் மதுபானசாலைகளை அகற்ற நடவடிக்கை!

மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இடம்பெற்ற வர்த்தகம் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு முழுமையான தரவுகளுடன் வெளிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்து தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்கான பணம் பெறப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

அதேபோன்று அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது கொள்ளையர்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். கொள்ளையர்களை அடையாளம் காணும் செயற்பாடு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.

அவ்வாறான பலர் தற்போது வாகனங்களை விட்டுச் சென்றுள்ளனர். பலர் வாகனங்களை வீதியில் பயன்படுத்தாமல் மறைத்து வைத்துள்ளமை தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

(Visited 3 times, 3 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content