இலங்கை செய்தி

இலங்கையில் ஆயுதப்படையை விட்டு வெளியேறியவர்களின் அட்டகாசம் – அம்பலப்படுத்திய பதில் பொலிஸ் மா அதிபர்

இலங்கையில் ஆயுதப்படை மற்றும் பொலிஸாரை விட்டு வெளியேறிய சுமார் 750 பேர் சமூகத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மல்வத்து மகாநாயக்க தேரர் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

இத்தகவல் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பிலேயே தெரியவந்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்தின் முன்னாள் படைவீரர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், நீதி நடவடிக்கைக்காக முழுத் துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறினார்.

நீதி நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை நாம் அவதானித்ததோடு, கட்டளைச் சட்டங்களில் இருந்து பொலிஸாருக்கு கிடைத்துள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக தொடரும் என பதில் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தினார்.

பொலிஸ் நிலையங்களினால் சட்டத்தை அமுல்படுத்துதல், போதைப்பொருள் சோதனைகள், குற்றவாளிகளை கைது செய்தல் என்பன தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதாகவும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காணப்படுகின்ற போதிலும், குறித்த அதிகாரிகளை வழிநடத்தி எதிர்காலத்தில் இந்த செயற்பாடுகள் அதிக திறனுடன் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர், காவல்துறை அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என்றால், அதுபற்றி தெரிவிக்கவும்.

(Visited 4 times, 4 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content