இலங்கை செய்தி

உலக கோப்பையை இழந்தது மிகவும் வருத்தமாக உள்ளது!!!! வனிந்து ஹசரங்க

 

 

கடந்த இரண்டு உலக சம்பியன்ஷிப் போட்டிகளிலும் தோற்றதற்கு வருத்தம் தெரிவிப்பதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

தான் எப்போதும் நாட்டுக்காக விளையாடி வருவதாகவும், கடந்த ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டியின் பின்னர் தனது காயம் ஓரளவு குணமடைந்ததால் பயிற்சியை ஆரம்பித்ததாகவும் அதன் காரணமாக மீண்டும் காயம் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்.

அதன்படி, தற்போதைய அறுவை சிகிச்சைக்குப் பிறகு 12 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் தற்போது ஐந்து வாரங்கள் கடந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

இதன்படி எதிர்வரும் வாரத்தில் இருந்து மீண்டும் சிறிய மட்டத்தில் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை-ஜிம்பாப்வே போட்டியில் விளையாடவுள்ளதாக வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யூடியூப் சேனலுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

வனிந்து ஹசரங்க தற்போது ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் 64வது இடத்திலும், 20-20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content