Site icon Tamil News

உலக கோப்பையை இழந்தது மிகவும் வருத்தமாக உள்ளது!!!! வனிந்து ஹசரங்க

 

 

கடந்த இரண்டு உலக சம்பியன்ஷிப் போட்டிகளிலும் தோற்றதற்கு வருத்தம் தெரிவிப்பதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

தான் எப்போதும் நாட்டுக்காக விளையாடி வருவதாகவும், கடந்த ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டியின் பின்னர் தனது காயம் ஓரளவு குணமடைந்ததால் பயிற்சியை ஆரம்பித்ததாகவும் அதன் காரணமாக மீண்டும் காயம் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்.

அதன்படி, தற்போதைய அறுவை சிகிச்சைக்குப் பிறகு 12 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் தற்போது ஐந்து வாரங்கள் கடந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

இதன்படி எதிர்வரும் வாரத்தில் இருந்து மீண்டும் சிறிய மட்டத்தில் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை-ஜிம்பாப்வே போட்டியில் விளையாடவுள்ளதாக வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யூடியூப் சேனலுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

வனிந்து ஹசரங்க தற்போது ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் 64வது இடத்திலும், 20-20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.

Exit mobile version