இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “skydiving” சாகச விளையாட்டு!(வீடியோ)
வானத்திற்கு எல்லையே என்று கூறுவார்கள். பல சாகசமான பயணங்கள் நாடெங்கிலும் காணப்பட்டு வருகின்றது.அதில் skydiving ஒரு வித்தியாசமான விளையாட்டு.அதாவது உயரமான இடங்களில் இருந்து குதித்து பின் ஒழுங்கான முறையில் தரையிறங்குவது தான்.
தெற்காசியாவிலேயே மிக உயரமான தாமரை கோபுரத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இலங்கையிலும் skydiving ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உலகபுகழ் பெற்ற skydiving சாகசர்கள் இலங்கைக்கு வருகை தந்து தனது பயணத்தை இனிதே செய்து முடித்துள்ளனர். இது தெடர்பான காணொளி ஒன்றை தாமரை கோபுர நிறுவனம் தனது சமூகவலைத்தளங்கள் பக்கத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இலங்கை மீதான ஆர்வம் அதிகரிக்கும் எனவும் கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.