ஆசியா

சிங்கப்பூர் குடியிருப்பில் மர்மம் – அடுத்தடுத்து ஏற்பட்ட மரணங்கள்

சிங்கப்பூர் – யூனோஸ் குடியிருப்பில் 63 வயதுமிக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதற்கு ஒரு நாள் முன்பாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் 33 வயது பெண் ஒருவரும், ஒரு வயது குழந்தையும் இறந்து கிடந்த நிலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது.

63 வயதான அந்த நபர் கடந்த நவம்பர் 6 ஆம் திகதி இரவு பிளாக் 33 யூனோஸ் கிரசன்ட்டில் மூன்றாவது மாடியில் இறந்து கிடந்துள்ளார்.

தனியாக வாழ்ந்து வந்த அவர் சீன நாட்டவர் என்றும், அவரை பார்ப்பதே அரிது என்றும் அங்கு குடியிருப்போர் கூறியதாக ஷின் மின் குறிப்பிட்டுள்ளது. அன்று மாலை 6:40 மணியளவில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அசையாமல் கிடந்த அவரை சோதித்ததில் அவர் இறந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.

இதில் ஏதும் சதிச்செயல் நடந்ததாக குறிப்பிட்டுள்ளது. சந்தேகிக்கவில்லை. விசாரணைகள் நடந்து வருகின்றன. இரண்டு நாளில் மூன்று இறப்புகள் ஏற்பட்டதால் குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவிப்பதாக ஷின் மின் குறிப்பிட்டுள்ளது.

முதல் சம்பவத்தில், பெண் மற்றும் கைக்குழந்தை ஆகிய இருவரும் கீழே விழுந்து மரணித்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content