Site icon Tamil News

சிங்கப்பூர் குடியிருப்பில் மர்மம் – அடுத்தடுத்து ஏற்பட்ட மரணங்கள்

சிங்கப்பூர் – யூனோஸ் குடியிருப்பில் 63 வயதுமிக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதற்கு ஒரு நாள் முன்பாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் 33 வயது பெண் ஒருவரும், ஒரு வயது குழந்தையும் இறந்து கிடந்த நிலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது.

63 வயதான அந்த நபர் கடந்த நவம்பர் 6 ஆம் திகதி இரவு பிளாக் 33 யூனோஸ் கிரசன்ட்டில் மூன்றாவது மாடியில் இறந்து கிடந்துள்ளார்.

தனியாக வாழ்ந்து வந்த அவர் சீன நாட்டவர் என்றும், அவரை பார்ப்பதே அரிது என்றும் அங்கு குடியிருப்போர் கூறியதாக ஷின் மின் குறிப்பிட்டுள்ளது. அன்று மாலை 6:40 மணியளவில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அசையாமல் கிடந்த அவரை சோதித்ததில் அவர் இறந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.

இதில் ஏதும் சதிச்செயல் நடந்ததாக குறிப்பிட்டுள்ளது. சந்தேகிக்கவில்லை. விசாரணைகள் நடந்து வருகின்றன. இரண்டு நாளில் மூன்று இறப்புகள் ஏற்பட்டதால் குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவிப்பதாக ஷின் மின் குறிப்பிட்டுள்ளது.

முதல் சம்பவத்தில், பெண் மற்றும் கைக்குழந்தை ஆகிய இருவரும் கீழே விழுந்து மரணித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version