ஐரோப்பா

பிரிட்டனில் அதிர்ச்சி.. மனைவியை கொன்று 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர கணவன்!!

பிரித்தானியாவின் செரிமொனியல் மாகாணம் லிங்கொன் பகுதியை சேர்ந்தவர் நிகோலஸ் மெட்சன் ( 28). இவரது மனைவி ஹொலி பிரம்லி ( 26). திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. செல்லப்பிராணிகள் மீது மிகுந்த வெறுப்பு கொண்டுள்ள நிகோலஸ் தனது மனைவி வளர்த்த செல்லப்பிராணிகளை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

குறிப்பாக, ஹொலி வளர்த்த செல்லப்பிராணி வெள்ளை எலிகளை மிக்சியில் அரைத்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொடூரமாக கொன்றுள்ளார். அதேபோல்,செல்லப்பிராணி நாயை துணிதுவைக்கும் எந்திரத்தில் வைத்து அரைத்து கொடூரமாக கொன்றுள்ளார்.இதனால், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. மனைவி ஹொலியை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அனுப்பாமல் நிகோலஸ் துன்புறுத்தியுள்ளார். அதேவேளை, தனது மகளை கடந்த சில நாட்களாக தொடர்புகொள்ளமுடியவில்லை என்று ஹொலியின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே, விசாரணை மேற்கொண்ட பொலிஸார், நிகோலசின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது, மனைவி ஹொலி தன்னை தாக்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக நிகோலஸ் பொலிஸாரிடம் கூறியுள்ளார். மேலும், மனைவி பல்லால் கடித்ததில் தன் உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை நம்பிய பொலிஸார் நிகோலஸ் வீட்டில் இருந்து சென்றனர்.

மனைவியின் சடலத்தை 200 துண்டுகளாக வெட்டி நதியில் வீசிய கொடூரன்: பிரித்தானியாவில் சம்பவம் | Monster Cut Wife Body Into Over 200 Pieces

இந்நிலையில், ஹொலி மாயமானதாக புகார் அளிக்கப்பட்டு 8 நாட்கள் கழித்து கடந்த ஆண்டு மார்ச் 25ம் திகதி லிங்கொன் பகுதியில் உள்ள வித்ஆம் ஆற்றில் பிளாஸ்டிக் பையில் மனித உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் அது ஹொலியின் உடல் என்பதை கண்டுபிடித்தனர். ஹொலியின் உடல் 224 துண்டுகளாக வெட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளது.

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார், ஹொலியின் கணவன் நிகோலசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி நண்பரின் உதவியுடன் ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரியும் நிலை உருவாகியுள்ளது. அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி ஹொலியை நிகோலஸ் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் உடலை 224 துண்டுகளாக வெட்டி வீட்டின் சமையல் அறையில் உள்ள பிரிட்ஜில் ஒருவாரமாக வைத்துள்ளார். பின்னர், தனது நண்பனான ஜோஷ்வா ஹென்காக்கை (28) அழைத்து மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்த 50 பவுண்டுகள் பணம் கொடுத்துள்ளார்.

மிக்சியில் அரைக்கப்பட்ட செல்லப்பிராணி: மனைவியை கொன்று உடலை 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரன்

இதையடுத்து, ஜோஷ்வாவுடன் சேர்ந்து துண்டுதுண்டாக்கப்பட்ட பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த தனது மனைவியின் உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து வித்ஆம் ஆற்றில் வீசியதை நிகோலஸ் ஒப்புக்கொண்டுள்ளார். மனைவியை கொலை செய்தப்பின் மனைவி இறந்தபின்னர் கிடைக்கும் பலன்கள் என்ன?, யாரேனும் உயிரிழந்தபின்னர் அவர்கள் ஆவியாக வந்து என்னை வேட்டையாடுவார்களா? என்றெல்லாம் நிகோலஸ் இணையதளத்தில் தேடியுள்ளார். அதேபோல், 50 பவுண்டுகள் பணம் வந்துவிட்டதாக நிகோலசுக்கு அவரது நண்பன் ஜோஷ்வா மெசேஜ் அனுப்பியுள்ளார். இதற்கான ஆதாரங்களை பொலிஸார் திரட்டியுள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தண்டனை விவரம் விரைவில் வெளியாக உள்ளதாக இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, நிகோலஸ் செல்லப்பிராணிகள் மீது வெறுப்பும் கொண்டவராகவும், ஆட்டிசம், மனநலப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content