ஐரோப்பா

ஜெர்மனியில் அகதி முகாம் அமைக்க திட்டம் – கடுமையாக எதிர்க்கும் மக்கள்

ஜெர்மனி நாட்டில் அகதி முகாம் ஒன்று அமைக்கபடுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு எதிராக நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜெர்மனியின் மெக்லம் பேர்க்கோமன் மாநிலத்தில் உள்ள பிரதேசத்தில் ஒரு அகதி முகாமை கட்டுவதற்கு அப்பிரதேசத்தில் உள்ள நகர நிர்வாகமானது முடிவு எடுத்து இருந்தது.

குறித்த இடத்தில் இவ்வாறான அகதி முகாமை கட்ட கூடாது என்று அப்பிரதேச மக்கள் நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நிர்வாக நீதிமன்றமானது அவ்வாறு பொது மக்களுடைய கருத்தை கருத்தில் கொள்ள முடியாது என்றும் அப்பிரதேசத்தில் அகதி முகாமை கட்ட முடியும் என்றும் தீர்ப்பை வழங்கிள்ளது.

அதாவது நிர்வாக நீதிமன்றமானது தனது தீர்ப்பை இவ்வாறு கூறி இருக்கின்றது.

இந்நிலையில் இந்த தீர்ப்பின் பிரகாரம் இந்த பிரதேசத்தினுடைய நகர நிர்வாகமானது அகதிகள் முகாம் ஒன்றை குறிப்பாக 250 அகதிகள் வசிக்க கூடிய வகையில் அகதி முகாமிற்குரிய கட்டுமானத்தை ஆரம்பித்து இருக்கின்றது.

இந்த கட்டுமான பணிகளுக்கு எதிரான முறையில் இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தியதாக தெரியவந்து இருக்கின்றது.

100ற்கு மேற்பட்டவர்கள் இந்த அகதி முகாம் கட்டும் இடத்திக்கு சென்று ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content