இலங்கை

திருகோணமலையில் மணல் ஆகழ்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

திருகோணமலை-வெருகல் நாதனோடையில் மணல் அகழ்வதை எதிர்த்து அப்பகுதியிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்காக வெருகல் பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் மணல் ஏற்றுவதற்காக செல்லும் வழியை மறைத்து மணல் ஏற்றுவதற்காக சென்ற வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாவலி கங்கையை அண்மித்த நாதனோடை ஊடாக வெள்ளம் பெருக்கெடுத்து சிறியளவில் காணப்பட்ட ஓடை 2008ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது பெரிதாக உடைப்பெடுத்துள்ளது.இதனூடாக மக்கள் இடம்பெயர்ந்து வேறு கிராமங்களில் வசித்து வந்ததாகவும் அக்காலப் பகுதியில் திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி வெள்ள நீரினால் மூழ்கி காணப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்காக அனுமதி வழங்கப்பட்ட போதிலும் பிரதேச மக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வதினால் பாதிப்புகள் ஏற்படலாம் என தெரிவித்தே குறித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content