25 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான கப்பலை காண திரளும் மக்கள்!
சாலமன் தீவு பகுதியில் பாறையில் மோதி விபத்துக்குள்ளான கப்பலை பார்வையிட சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளனர்.
பசிபிக் பெருங்கடலின் ஆழமற்ற பகுதியில் அதன் பக்கத்தில் கப்பல் உடைந்த பிறகு MS வேர்ல்ட் டிஸ்கவர் கப்பல் பாலடைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
இதன் பெறுமதி தற்போதைய கணக்கின்படி 40 மில்லியன் யூரோக்களாகும். கண்காணிப்பு லவுஞ்ச், நூலகம், விரிவுரை மண்டபம், நீச்சல் குளம் மற்றும் சன் டெக் மற்றும் ஒரு சிறிய உடற்பயிற்சி மையம் ஆகியவற்றை கொண்டு கட்டப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு இது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஜேர்மனியால் கட்டப்பட்ட இந்த கப்பல் அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து கனடாவில் உள்ள மாண்ட்ரீல் வரை செல்லும் கிரேட் லேக்ஸ் கப்பல் பாதையில் பயணித்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.