Site icon Tamil News

இத்தாலிய புகலிட மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து: 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மத்திய இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 31 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

“அநேகமாக வாயு கசிவு காரணமாக இருக்கலாம்” இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் ரோம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது கோமா நிலையில் இருப்பதாக அன்சா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version