வட அமெரிக்கா

கனடாவில் இருந்து 28,000க்கும் அதிகமான புலம்யெர்ந்தோர் நாடு கடத்தப்படும் அபாயம்

கனடாவில் இருந்து 28,000க்கும் அதிகமான புலம்யெர்ந்தோரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கனடாவின் இரண்டு பெரிய விமான நிலையங்களில் அகதி கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

2019 முதல் 2023ஆம் ஆண்டு வரை விமான நிலையங்களில் சுமார் 72,000 பேர் அகதிகள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இது இந்த ஐந்தாண்டு காலத்தில் கனடாவில் பதிவான அகதிகள் கோரிக்கைகளில் 18 சதவீதத்தை குறிக்கிறது.

அகதி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாலும், பல கோரிக்கையாளர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை.

கனடா எல்லை சேவைகள் முகமையகம் (Canada Border Services Agency (CBSA)) இந்த விடயத்தை தெரிவிக்கிறது.

கடந்த மாதம் வரை, 28,000க்கும் அதிகமான வெளியேற்ற உத்தரவுகளை CBSA அகதி கோரிக்கையாளர்களுக்கு வழங்கியது.

விமானப் பயணிகளின் அகதி கோரிக்கை அதிகரிப்புக்கான முக்கிய இடமாக Montreal Trudeau சர்வதேச விமான நிலையம் அமைகிறது.

2022 முதல் 2023 வரை அகதி கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது.

Toronto Pearson சர்வதேச விமான நிலையம் அதே காலப்பகுதியில் அகதிகளின் கோரிக்கைகளை மூன்று மடங்கிற்கும் அதிகமாக பதிவு செய்துள்ளது.

(Visited 13 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content