Site icon Tamil News

பூமிக்கு நெருக்கமாக வரும் சந்திரன் : மீன இராசியினருக்கு கிடைக்கும் இராஜயோகம்!

இந்த மாதத்தில் வழக்கத்தை விட முழு நிலவானது பூமிக்கு நெருக்கமாக இருப்பதால் மீன இராசியில் பிறந்தவர்கள் மாயாஜால இரவை காண்பார்கள் என பிரித்தானியாவின் பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.

அவருடைய கணிப்பின்படி, மீன ராசியில் வரும் செப்டம்பர் 18 அன்று சூப்பர் மூன் உச்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இது நிலவின் முழு குணங்களை வெளிப்படுத்துவதாகவும், முழு நிலவு மீனத்தின் உணர்திறன் அடையாளத்தில் இருப்பதால் உயர்ந்த கற்பனை, தெளிவான கனவுகள் மற்றும் ஏனையவர்களின் உள்ளுணர்வுகளை புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

காதல் உள்ளுணர்வு அதிகமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையை கடக இராசிகாரர்களும் கொண்டிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் மீன இராசிகார்களின் கனவுகள் அனைத்தும் வரிசையாக நிறைவேறும். செப்டம்பர் முழுவதும் கர்மாவின் கிரகமான சனியும் மீனத்தில் இருப்பதால் தடைகளை சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version