ஜப்பானின் குறைந்து வரும் பிறப்பு விகிதம் – அரசாங்கத்தின் புதுவிதமான முயற்சி
ஜப்பானின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க டோக்கியோ உள்ளூர் அதிகாரிகள் டேட்டிங் செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த செயலியை தங்கள் கையடக்க தொலைபேசி அல்லது அதுபோன்ற சாதனங்களில் பதிவிறக்கம் செய்பவர்கள், தாங்கள் தனிமையில் உள்ளவரா, திருமணம் செய்து கொள்ளத் தயாராக உள்ளதா என்பதைக் குறிப்பிடும் அறிவிப்பிலும், சம்பளத்தை உறுதிப்படுத்தும் கடிதத்திலும் கையொப்பமிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர், புதிய செயலி இந்த ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.
ஜப்பான் முழுவதும் வீழ்ச்சியடைந்து வரும் தேசிய பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக, டோக்கியோ அதிகாரிகள் தாங்களே உருவாக்கிய இந்த பயன்பாட்டை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஜப்பானில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் 70 சதவீதம் பேர் துணையை தேட இதுபோன்ற நவீன முறைகளை பயன்படுத்துவதில்லை என புதிய அப்ளிகேஷனை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள டோக்கியோ அரசு அதிகாரி ஒருவர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து இலவசமாகக் கிடைக்கும் இந்தச் செயலி, பதிவுச் செயல்முறையின் ஒரு பகுதியாகப் பயனரின் அடையாளத்தைச் சரிபார்க்க அவர்களின் அனைத்து சரியான தகவல்களையும் வழங்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டில், ஜப்பானில் பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்தபட்ச மதிப்பிற்குக் குறைந்தது, மேலும் நாட்டில் இறப்புகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
ஜப்பானிய அரசாங்கத்தின் அடிப்படை தரவுகளின்படி, நாட்டில் பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளது, மேலும் கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 758,631 ஆகும். அந்த ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,590,503 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழில்நுட்ப ஜாம்பவானாக விளங்கும் ஜப்பான் தொழிலாளர் பற்றாக்குறையை சந்தித்து வரும் நிலையில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் குடும்பங்களுக்கு நிதியுதவி, பெற்றோர் விடுப்பு உள்ளிட்ட கொள்கைகளை அமல்படுத்துவதாக பிரதமர் புமியோ கிஷிடா உறுதியளித்துள்ளார்.