இலங்கை

திருகோணமலையில் சர்வ மத ஒன்றியம் – ஜனாதிபதியின் கொள்கை பிரிவினருக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

திருகோணமலை மாவட்ட சர்வ மத ஒன்றியம் மற்றும் ஜனாதிபதியின் உண்மை நல்லிணக்க பொதுமுறைக்கான கொள்கை பிரிவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04.01) இடம் பெற்றது.

திருகோணமலையிலுள்ள எகெட் கரித்தாஸ் அலுலகத்தில்  அருட்தந்தை டொக்டர் போல் ரொபின்ஷன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சர்வமத ஒன்றிய செயலாளர் முஹம்மத் றிஸ்மி இந்நிகழ்வினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் திருகோணமலை மாவட்டத்தில் இன நல்லிணக்கத்திற்கு பாதகமான காரணிகளையும் தெளிவு படுத்தினார்.

பத்திர காளியம்மன் ஆலயத்தின் பிரதம குரு ஸ்ரீ ரவிச்சந்திர குருக்கள் கருத்து தெரிவிக்கையில் எமது மாவட்டத்தில் மூவின மக்களும் சமாதானமாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ்கின்றோம். இருந்த பொழுதும் இதனை சீர்குலைப்பதற்கு வேறொரு சக்திகள் இங்கே இயங்குவதனை அவதானிக்க கூடியதாக காணப்பட்டது.

அத்துடன் மௌலவி ஹதியத்துல்லா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தற்போதைய காலப்பகுதியில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இளைஞர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி காணப்படுகின்றனர்.

இதனை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் சட்டம் ஒழுங்கு சீரமைக்கப்பட வேண்டும் அத்துடன் ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் தற்பொழுது இயங்கி வருகின்ற யுத்திய செயற்திட்டம் மேலும் வலுப்பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளான கலந்து டொக்டர் அசங்க குணவன்ச மற்றும் டொக்டர் யுவி தங்கராசா மேலும் பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், திருகோணமலை மாவட்ட மறை மாவட்ட ஆயர், திருமலை மாவட்ட சர்வ மதத்தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content