வட அமெரிக்கா

அமெரிக்கா சென்ற இந்திய மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்காவிற்கு மேல் படிப்பிற்காக சென்ற இந்திய மாணவியை மின்னல் தாக்கியதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர் சுஸ்ருன்னியா என்பவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுள்ளார்.

அவர் அமெரிக்காவிற்கு மேல் படிப்பிற்க்காக சென்று, அங்குள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தகவல் தொழில் நுட்பம் படித்து வந்துள்ளார்.

கல்லூரி படிப்பு முடிந்ததும், சுஸ்ருன்னியா இன்டர்ன்ஷிப் பயிற்சி எடுத்து வருகிறார். இவர் சம்பவத்தன்று, ஜான்ஜசிண்டோ நினைவு இடத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தார்.

அப்போது அவரை திடீரென மின்னல் தாக்கியதால், அவர் அருகில் இருந்த குளத்தில் விழுந்துவிட்டார்.

இதை பார்த்தவர்கள் சுஸ்ருன்னியாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மின்னல் தாக்கியதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மூளை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் .

பின்னர் அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மாணவி கோமாவில் இருக்கும் தகவல் அறிந்த, இந்தியாவில் இருக்கும் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

(Visited 13 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content