Site icon Tamil News

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உரிமம் மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

லங்கா இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உரிமம் மேலும் 20 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உரிமம் வழங்கப்பட்டு 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கையில் எரிபொருளை விநியோகிப்பதற்கான சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உரிமம் கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமூக வலைத்தளங்களில் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தில் இருந்து மேலும் 20 வருடங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் நிறுவனத்தின் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

லங்கா இந்திய எண்ணெய் நிறுவனம் 2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் எரிபொருளை விநியோகித்து வருகிறது.

Exit mobile version