வட அமெரிக்கா

கனடாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வீடுகளை விட்டு வெளியேறியுள்ள லட்ச கணக்கான மக்கள்

கனடாவில் காட்டுத் தீ சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் 670க்கும் அதிகமான காட்டுத் தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

எப்படியிருப்பினும் அவற்றில் 380க்கும் மேற்பட்ட சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தீவிரக் காட்டுத் தீக்கான பருவம் முடிய இன்னும் குறைந்தது 3 மாதங்கள் இருப்பதாகக் கனடிய இயற்கை வள அமைச்சகத்தைச் சேர்ந்த Michael Norton கூறுகிறார்.

கனடாவின் மேற்கிலுள்ள பகுதிகளில் வரவிருக்கும் வாரங்களில் ஏற்கெனவே கணிக்கப்பட்டதைக் காட்டிலும் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

9 மில்லியன் ஹெக்டர் காடுகள் ஏற்கெனவே தீயில் அழிந்துவிட்டன. அது கடந்த 10 ஆண்டுகளின் சராசரியைவிட 11 மடங்கு அதிகமாகும்.

மே மாதத் தொடக்கத்திலிருந்து சுமார் 155,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content