இலங்கை செய்தி

இலங்கை கிரிக்கெட்ட மீதான தடையை நீக்க ஐசிசி பச்சைக் கொடி

இலங்கை கிரிக்கெட் மீதான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதித்துள்ள தடை பிப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த ICC இன் தலைமை செயல் அதிகாரி Geoff Allardice உடனான ஆக்கபூர்வமான கலந்துரையாடலின் பின்னர் ICC தடை நீக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஐசிசி குழு திருப்தியடைந்துள்ளதாகவும், அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் இலங்கை மீதான தடையை நீக்குவதற்கு பச்சைக்கொடி காட்டியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐசிசி பிரதிநிதிகள் குழு இலங்கையின் விளையாட்டு சாசனம் பற்றி அறிந்திருப்பதாக கூறிய அமைச்சர், ஐசிசி நடத்தை விதிகளுக்கு இணங்க விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தற்போதைய விளையாட்டு அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பு சுற்றுலா அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content