Site icon Tamil News

மாதம்பே வனப்பகுதியில் மனித எலும்புத் துண்டுகள் கண்டுப்பிடிப்பு!

மாதம்பே பனிரெண்டாவ வனப்பகுதியில் மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் இந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாதம்பே பனிரெண்டாவ பிரதான வீதியில் உள்ள காப்புக்காட்டில் சுமார் 150 மீற்றர் தூரத்தில் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடையது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எலும்புகளை வைத்திருப்பவர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில், ஹலாவத் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, நேரில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version