ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது
ஐரோப்பிய ஆணையம் GSP+ திட்டத்தை 04 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முன்மொழிந்துள்ளது.
புதிய ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை சட்டவாக்க உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்று வரும் கலந்துரையாடலின் விளைவால் இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டண வசதியை நீடிப்பதன் மூலம், 27 சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் உள்ள கடப்பாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றிய சந்தையை இலங்கை தொடர்ந்து அணுகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
2024 – 2033 க்கு ஏற்றுக்கொள்ளப்படும் EU GSP ஒழுங்குமுறை, ஜனவரி 1, 2024 முதல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நடைமுறைக்கு வரும்.
(Visited 7 times, 1 visits today)