செய்தி

சிங்கப்பூரில் கோயில் நிதியில் 38,000 டொலர் திருடிய பெண் பணியாளருக்கு கிடைத்த தண்டனை

சிங்கப்பூரில் கோயில் நிதியில் 38,000 டொலர் திருடிய அதன் பெண் பணியாளர் ஒருவருக்கு 10 மாதங்கள் 2 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நடந்த நேரத்தில், Tham Lai Ying என்ற 44 வயதான பெண் Toa Payoh Seu Teck Sean Tong கோயிலில் நிர்வாக உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அன்றாடம் உணவகங்களில் சாப்பிடுவதற்கும், பொருட்கள் வாங்குவதற்கும் அவர் அந்த நிதியைப் பயன்படுத்தினார்.

Tham Lai Yingஇன் செயல் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று அரசுத் தரப்புத் துணை வழக்கறிஞர் லிம் லி டிங் தெரிவித்துள்ளார்.

அறநிதி நோக்கங்களுக்காக பொதுமக்கள் அந்தப் பணத்தைக் கொடுத்ததே அதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் தம்மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டை தாம் ஒப்புக்கொண்டார்.

அவர் அந்த கோயிலில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பணியில் சேர்ந்ததாகவும் அவருக்கு மாதச் சம்பளமாக 1,600 டொலர் வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

நன்கொடை, உறுப்பினர் கட்டணங்களைப் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. பணத்தைப் பெற்றுக்கொண்டதற்கான ரசீதை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கிய பிறகு, அதற்கான ரசீது புத்தகத்தையும் பணத்தையும் கோயிலின் நிதி அதிகாரியிடம் அவர் ஒப்படைக்க வேண்டும்.

கோயிலில் பணிக்குச் சேர்ந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, பணத்தைக் கையாடல் செய்ய அவர் தொடங்கியதாகக் கூறப்பட்டது. அவர் மொத்தம் 38,799 டொலர் திருடியுள்ளார்.

அவர் பேராசையில் பணத்தைத் திருடியதாக அரசாங்கத் தரப்புத் துணை வழக்கறிஞர் லிம் கூறினார்.

குற்றத்தை மறைக்க, தாம் சில ரசீது புத்தகங்களை நிதி அதிகாரியிடம் ஒப்படைக்கவில்லை. 2022ஆம் ஆண்டு மே மாதத்தில், புத்தகங்கள் இல்லாததை உணர்ந்த நிதி அதிகாரி, கோயிலின் தலைமைச் செயலாளரிடம் அது பற்றித் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மறுமாதம் உள்கணக்காய்வு நடத்தப்பட்டது.

தலைமைச் செயலாளர் கேட்டபோது, தாம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் பின்னர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content