நாரஹேன்பிட்டிய பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய யுவதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கடந்த (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்டகால காதல் காரணமாக ஏற்பட்ட தகராறே தாக்குதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
காயமடைந்த யுவதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் இருந்து இறங்கிய இந்த யுவதி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டிய காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.