இலங்கை

உயர்மட்ட பேச்சுவார்த்தைக்காக சீனா சென்ற இலங்கை முன்னாள் ஜனாதிபதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.

சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் அவர் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் தூதுக்குழுவில் மேலும் நால்வர் அடங்குவதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை முகாமையாளர் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது அவர் சீன ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மற்றும் முக்கிய உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு சீனாவின் எக்சிம் வங்கி உதவியளித்தமை, இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content