Site icon Tamil News

உயர்மட்ட பேச்சுவார்த்தைக்காக சீனா சென்ற இலங்கை முன்னாள் ஜனாதிபதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.

சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் அவர் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் தூதுக்குழுவில் மேலும் நால்வர் அடங்குவதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை முகாமையாளர் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது அவர் சீன ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மற்றும் முக்கிய உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு சீனாவின் எக்சிம் வங்கி உதவியளித்தமை, இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

Exit mobile version