இலங்கை

இலங்கைக்குள் நுழைய தயாராகும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் – அனுமதி வழங்கும் அரசாங்கம்

அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தேசிய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், இலங்கை இந்தியப் பெருங்கடலில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் ஒரு வருட காலத்திற்கு இலங்கைக்கு வர தடை விதிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா தனது கவலையை தெரிவித்தமையே இதற்கு காரணமாகும்.

எவ்வாறாயினும், ஏனைய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை இலங்கைக்கு பதிலாக மாற்றக்கூடாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயன்படுத்தப்படாத கடல் வளங்கள் இருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்வது அவசியமானது என்றும் தெரிவித்த அமைச்சர், அது வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content