ஐரோப்பா

79 பேரின் உயிரை பறித்த ஐரோப்பிய கனவு – 106 பேரை காப்பாற்றிய செல்வந்தரின் படகு

கிரீஸுக்கு அருகே மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்த பெரும் சோகமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

20 முதல் 30 மீட்டர் வரை நீளம் கொண்ட அந்தப் படகில் நூற்றுக்கணக்கான குடியேறிகள் இருந்ததாக நம்பப்படுகிறது.

அவர்கள் லிப்யாவிலிருந்து இத்தாலிக்குச் சென்றுகொண்டிருந்தனர். தேடல் பணிகளில் மெக்சிகோவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தரின் சொகுசுப் படகு பேருதவி புரிந்தது.

குறித்த செல்வந்தரின் சொகுசுப் படகில் 106 பேர் காப்பாற்றப்பட்டதாக Bloomberg செய்தி நிறுவனம் சொன்னது.

படகு மெக்சிகோவில் ‘வெள்ளி அரசர்’ என்று அழைக்கப்பட்ட அல்பெர்ட்டோ பைலியெரெஸுக்குச் (Alberto Bailleres) சொந்தமானது.

ஒரு காலத்தில் உலகின் ஆகப் பெரிய வெள்ளி உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த அவர் கடந்த ஆண்டு காலமானார். Bloomberg தகவல்படி அவர் மெக்சிகோவின் 4-ஆவது ஆகப் பெரிய செல்வந்தராக இருந்தவர்.

(Visited 7 times, 1 visits today)
See also  அயர்லந்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த உல்லாசக் கப்பல் - 3.5 ஆண்டுகளுக்கு பயணம்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content