ஐரோப்பா

ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்காக அமுலாகும் நடவடிக்கை

Aஜெர்மனி நாட்டில் இயங்குகின்ற வெளிநாட்டவர் அலுவலகங்கள் டிஜிடல் முறையில் இயங்க வேண்டும் என்று என ஜெர்மனிய அதிபர் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஜெர்மனிய அதிபர் ஓலா சொய்ஸ் அவர்கள் எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டவர் காரியாலங்களை டிஜிடல் முறையில் தொழிற்படுத்த வேண்டும் என கோரிக்கைகயை முன்வைத்துள்ளார்.

அதாவது கடந்த காலங்களில் வெளிநாட்டவர் காரியாலங்களின் செயற்பாடுகள் கால தாமதமாக செல்கின்ற காரணத்தினால் இவ்வாறாக நவீன மயப்படுத்த வேண்டும் என இவர் தெரிவித்து இருக்கின்றார்.

இதன் காரணத்தினால் ஜெர்மன் அரசாங்கமானது ஏற்கனவே ஒரு பில்லியன் யுரோக்களை அகதிகள் விடயம் மற்றும் வெளிநாட்டவர் காரியாலங்களை நவீனப்படுத்துவதற்கு என முதலீடு செய்வதாகவும் அவர் கூறி இருக்கின்றார்.

இந்நிலையில் கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய உள்ளுர் ஆட்சி அமைச்சர்கள் ஐரோப்பாவினுடைய வெளி எல்லைகளில் வருகின்ற அகதிகள் விடயத்தில் கடுமையான ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு முடிவெடுக்க தீர்மானித்துள்ளனர்.

போலாந்துடைய பிரதமர் கருத்து வெளியிடுகையில் ஏற்கனவே காணப்பட்ட இணக்கப்பாடு தொடர்பில் தமது நாட்டிலே சர்வ ஜன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுடைய கருத்து கணிப்பு அடிப்படையலேயே இந்த உத்தேச புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து இருக்கின்றார்.

(Visited 11 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content