செய்தி விளையாட்டு

தோனி நீக்கம் – ‘தலைக்கு’.. இந்த பதவியை கொடுக்க முடிவு?

ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன், யார் யாரை தக்கவைப்பது, யார் யாரை கழற்றிவிடுவது போன்ற விஷயங்கள் குறித்து, அனைத்து அணிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

மகேந்திரசிங் தோனி தக்கவைக்கப்படவில்லை என்றால், அது சிஎஸ்கே நிர்வாகத்திற்கு பின்னடைவுதான்.

அதிக ரசிகர்கள் போட்டிகளை பார்க்க வர மாட்டார்கள். மேலும், சிஎஸ்கேவுக்கு இருக்கும் ஆதரவு, பகுதியாக குறைந்துவிடவும் வாய்ப்புள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், 4 வீரர்களை தக்கவைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகத்தான் இருக்கும்.

குறிப்பாக, மகேந்திரசிங் தோனியை தக்கவைக்க முடியாத நிலை கூட ஏற்படலாம் என்பதால், அது சிஎஸ்கேவுக்கு பெரும் தலைவலியாக மாற வாய்ப்புள்ளது.

வீரர்களுடன் சேர்த்து, ஒரேயொரு uncapped வீரரை சேர்க்க பிசிசிஐ அனுமதியளிக்க வாய்ப்பு உள்ளது.

அப்படி நடந்தால், 5 வருடங்களாக இந்திய அணிக்கு ஆடாதவர்களை uncapped வீரர் இடத்தில், தக்கவைக்க முடியும்.

தோனி இந்த வரம்புக்குள் வருவார் என்பதால், தோனியை சுலபமாக தக்கவைக்க முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, யார் யாரை தக்கவைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

சிஎஸ்கேவில் முதலாவதாக ருதுராஜ் கெய்க்வாட்டை தக்கவைக்க வாய்ப்புள்ளது. அடுத்து, ரவீந்திர ஜடேஜா இருப்பார்.

இந்த இருவருக்கும், கிட்டதட்ட ஒரேமாதிரியாக தொகையை கொடுக்க வாய்ப்புள்ளது.

அடுத்து, ஷிவம் துபே மற்றும் மதிச பதிரனாவை சிஎஸ்கே தக்கவைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஆர்டிஎம் கார்ட் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டிவோன் கான்வேவை தான் வாங்கும்.

அப்படி வாங்க முடியவில்லை என்றால், முஷ்தபிசுர் ரஹ்மான் அல்லது டேரில் மிட்செல் ஆகியோரில் ஒருவரை வாங்க வாய்ப்புள்ளது.

ஒருவேளை, மகேந்திரசிங் தோனியை தக்கவைக்க முடியவில்லை என்றால், அவரை ஏலத்திற்கு அனுப்ப வாய்ப்பில்லை.

ஏலத்தில் தோனி பங்கேற்றால் அவரை அதிக தொகை கொடுத்து சில அணிகள் வாங்க முற்படலாம்.

இதனால், RTM கார்டை கூட சிஎஸ்கேவால் பயன்படுத்தி, தோனியை வாங்க முடியாத நிலை இருக்கும்.

ஆகையால், மகேந்திரசிங் தோனியை தக்கவைக்க முடியவில்லை என்றால், அவர் உடனே ஓய்வு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

அப்படி ஓய்வு அறிவித்தால், தோனிக்கு அணியின் ஆலோசகர் பதவியை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content