Site icon Tamil News

டெங்கு குறித்து அவதானம்

15 மாவட்டங்களைச் சேர்ந்த 55 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு தொற்று நிலைமை உருவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 31,000ஐ தாண்டியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதிவாகியுள்ள நோயாளர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Exit mobile version