இலங்கை செய்தி

யாழில் மருந்தகத்தில் மரண சடங்கு.. சுகாதார அதிகாரிகள் விசாரணை 

யாழில் உள்ள மருந்தகம் ஒன்றில் உயிரிழந்த உறவினர் ஒருவரின் மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாக யாழில் உள்ள வீடு ஒன்றை தனியார் மருந்தகமாக பதிவு செய்து நடத்திவந்த நிலையில் குறித்த மருந்தகத்தின் உறவினர் ஒருவரின் மரணச் சடங்கு குறித்த மருந்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மருந்துகள் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பாக பேணப்பட வேண்டுமென சுகாதார வழிகாட்டல்கள் குறிப்பிடப்படுகின்ற நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை இரு நாட்களாக குறித்த மருந்தகத்தில் வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாது மரணச் சடங்கை நடத்துவதற்காக மருந்தகத்தில் இருந்து சில மருந்துகள் வெளியில் கொண்டு செல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகிறது.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உணவு காட்டுப்பாட்டு அதிகாரிகள் குறித்த மருந்தகத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவர்களின் விசாரணைகளுக்கு அழுத்தங்கள் உயர் அதிகாரிகளால் பிரயோகிக்கப்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைக்கிறது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content