ஆசியா

சிங்கப்பூரில் தமிழருக்கு காத்திருக்கும் ஆபத்து – குடும்பத்தவர்கள் உருக்கமான வேண்டுகோள்

சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் கஞ்சா வைத்திருந்தமைக்காக மரணதண்டனையை எதிர்கொள்ளவுள்ளார்.

தண்டனை நிறைவேற்றத்தை எதிர்கொண்டுள்ள தங்கராஜூ சுப்பையா என்ற 46 வயது நபரின் குடும்பத்தினர் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கை மீள்விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கஞ்சாகடத்தல் முயற்சியில் ஈடுபட்டமைக்காக சுப்பையாவிற்கு 2018 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் புதன்கிழமை தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

எனது சகோதரர் குறித்த வழக்கு நியாயமான விதத்தில் இடம்பெற்றதாக நாங்கள் கருதவில்லை எங்கள் ஜனாதிபதி மீது எனக்கு நம்பிக்கையுள்ளது அவர் மனுவை வாசிப்பார் என கருதுகின்றேன் என  சகோதரி லீலாவதி சுப்பையா தெரிவித்துள்ளார். இளவயதிலிருந்து எனது சகோதரர்இரக்ககுணமிக்கவர் அனைவராலும் விரும்பப்பட்டவர் அவர் எவருக்கும் எந்த தீமையும் செய்யவில்லை அவர் தனது குடும்பத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்தார் என சகோதரி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

ஆறுமாதகாலப்பகுதியில் சிங்கப்பூர் முதல்தடவையாக மரணதண்டனையை நிறைவேற்றவுள்ளது. 2017 இல் கஞ்சா வைத்திருந்தார் என அதிகாரிகள் சுப்பையாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர். தாய்லாந்து உட்பட பல நாடுகளில் கஞ்சா  வைத்திருப்பது குற்றமற்ற செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மரண்தண்டனையை கைவிடவேண்டும் என மனித உரிமை அமைப்புகள்வேண்டுகோள் விடுத்துவருகின்றன.

இந்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதத்தில் பல தவறுகளும் பிழைகளும் உள்ளதாக குடும்ப உறுப்பினர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content