Site icon Tamil News

கச்சா எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு!

கச்சா எண்ணெய் உற்பத்தியை  நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய் என்ற அளவில் குறைக்கப் போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

அரேபியாவின் எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ஒரு அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெ பீப்பாய் ஒன்றின் விலை 77.64 அமெரிக்க டொலராக காணப்படும் நிலையில்இ எதிர்காலத்தில் 1.51 அமெரிக்க டொலரிலோ அல்லது 2மூ இல் அதிகரிக்கும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.டி

ஏற்கனவே நாளாந்தம் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி ஏப்ரலில் அறிவிக்கப்பட்டு மே மாதம் முதல் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version