ஆசியா

ஊழல் குற்றச்சாட்டு: ஜப்பானில் ஆளுங்கட்சி அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்த உத்தரவிட்ட பிரதமர்

ஜப்பானில் ஜனநாயக லிபரல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தேர்தல் நன்கொடை நிதியை ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தங்களுடைய சொந்த காரணங்களுக்காக செலவு செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உத்தரவிட்டார்.

இதற்கிடையே நன்கொடை நிதியை ஊழல் செய்ததாகக்கூறி 4 மந்திரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய கட்சியின் தேசிய தலைவர் பதவியை புமியோ கிஷிடா ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில் ஜப்பானின் பல்வேறு இடங்களில் உள்ள ஜனநாயக லிபரல் கட்சிக்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்கத்துறை, பொலிஸாருடன் இணைந்து அரசு வழக்கறிஞர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content