இலங்கை செய்தி

கிளப் வசந்தா உள்ளிட்டவர்கள் கடைசியா காணப்பட்ட புகைப்படம்

அதுருகிரி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தா மற்றும் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

அதுருகிரியவில் மணிக்கூண்டு கால்வாய்க்கு அருகில் உள்ள அழகு நிலையம் திறப்பு விழாவின் போது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது, துப்பாக்கிச் சூடு இடம்பெறுவதற்கு சற்று முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் அங்கிருந்தவர்கள் அனைவரும் இவ்வாறு காணப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் 4 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரபல வர்த்தகரான 55 வயதான கிளப் வசந்தா மற்றும் 38 வயதுடைய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் கொழும்பு 07 மற்றும் அதுருகிரி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபல பாடகர் கே. சுஜீவாவும் காயமடைந்தார், மேலும் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர்.

காயமடைந்த கே. சுஜீவா மற்றும் ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மற்றைய இரு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கே. சுஜீவா அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் காரில் வந்து இரண்டு டி56 துப்பாக்கிகளை பயன்படுத்தி சுடுவதும், காரை தவிர்த்துவிட்டு வேனில் தப்பிச் செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், இன்று பிற்பகல் இடம்பெற்ற பொலிஸ் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, துப்பாக்கிச் சூடு சம்பவம் வெளிநாட்டில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

இது திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு என்றும், சில காலமாக நிலவி வரும் தகராறு துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றமைக்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண்ணொருவரின் பயணப் பையில் ரிவால்வர் ஒன்று காணப்பட்டதாகவும், அது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சட்டத்தரணி நிஹால் தல்துவா கூறியுள்ளார்.

 

(Visited 6 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content