இலங்கை

இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம் – மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையில் இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்த இலக்கை விடவும் தாழ்ந்த மட்டத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள நாணயக் கொள்கை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் காரணமாக, நாட்டின் பணவீக்கம் எதிர்வரும் 7 மாதங்களுக்கு 5 சதவீதத்திலும் குறைந்த மட்டத்தில் காணப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதகமற்ற புள்ளிவிவரங்களின் விளைவுகளின் அடிப்படையில், அடுத்த வருடம் இரண்டாம் காலாண்டில் முதன்மை பணவீக்கம் தற்காலிக உயர்வொன்றைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் பணவீக்கம் 1.7 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக அதிகரித்தது.

இதேவேளை இந்த வருடத்தின் இறுதியில் இலங்கையின் பொருளாதாரம் 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content