Site icon Tamil News

இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம் – மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையில் இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்த இலக்கை விடவும் தாழ்ந்த மட்டத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள நாணயக் கொள்கை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் காரணமாக, நாட்டின் பணவீக்கம் எதிர்வரும் 7 மாதங்களுக்கு 5 சதவீதத்திலும் குறைந்த மட்டத்தில் காணப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதகமற்ற புள்ளிவிவரங்களின் விளைவுகளின் அடிப்படையில், அடுத்த வருடம் இரண்டாம் காலாண்டில் முதன்மை பணவீக்கம் தற்காலிக உயர்வொன்றைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் பணவீக்கம் 1.7 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக அதிகரித்தது.

இதேவேளை இந்த வருடத்தின் இறுதியில் இலங்கையின் பொருளாதாரம் 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது.

Exit mobile version