இலங்கை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு

இன்றைய தினம் (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை நாளைய தினமும் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9.00 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிடம் 08 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து நேற்று (29) இலங்கை வந்தடைந்தார்.

அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், அவர் நாடு திரும்பி 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலமொன்றை வழங்குமாறு அவருக்கு அண்மையில் உத்தரவிடப்பட்டிருந்து.

அந்த உத்தரவின்படி, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content